இந்நிலையில், நேற்று முன்தினம் 10வது குழியில் நடந்த அகழாய்வில் சுடுமண் சங்கு வளையல், மணி, காதணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், ‘இங்கு நம் முன்னோர் பல தொழில்களில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றன. தற்போது சங்கு வளையல் கிடைத்ததன் மூலம், அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அலங்காரத்தில் ஆர்வம் காட்டியதற்கு சான்றாக சுடுமண் மணி, அலங்கரிக்கப்பட்ட காதணி ஆகியவை கிடைத்துள்ளன’ என்றார்.