சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.171 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் ரூ.171 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.184 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார்.