சீமான் மீது எஸ்பியிடம் புகார்

நாகர்கோவில்: குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப் ராஜ் தலைைமையில் திமுக வழக்கறிஞர்கள் நேற்று மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டம் களியக்காவிளையில் சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சித்திருந்தார். மேலும், இருபிரிவினர் இடையே வன்முறை, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.எனவே சீமான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

செங்குன்றம் அருகே கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி மீது செல்போன் வீச்சு: நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு

எல்லையோர மக்கள் உடனே வெளியேற உத்தரவு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்: ஹிஸ்புல்லா மறுப்பு; சர்வதேச விமானங்கள் ரத்து