நாமக்கல்: நாமக்கல் அருகே கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மீது பாலியல்தொல்லை புகார்கூறி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் ஆசிரியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. பரமத்தி டிஎஸ்பி கலையரசன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.