ஏற்கனவே திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதற்கிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்கள், கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களிடம் ரூ.1000 பணம் பெற்று தரிசனத்துக்கு அனுமதிப்பதாக வீடியோ ஒன்று கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த புகாரில் ஆயிரம் ரூபாய் கட்டண தரிசன வரிசையில் கோயில் பணியாளர், சிறப்பு அலுவலர் கட்டண சீட்டு வழங்குவதை முற்றிலும் மறைத்து, சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவதை காட்டாமல் கோயில் பணியாளர் பணம் பெறுவதை மட்டுமே வீடியோ எடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற வகையில் வீடியோ பரப்பியதாக பாஜ பிரமுகர் மீது இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கூறியுள்ளார்.