சென்னை: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி உள்ளிட்டோர் மீதான புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பு சொத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து விசாரிக்கப்பட்டு அடுத்த 15 நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.