சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: சி.ஏ.ஏ. சட்டம் என்னவென்று தெரியாமல் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கின்றன. இது யாருக்கும் எதிரானது அல்ல. இந்தியாவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர். சி.ஏ.ஏ. சட்டத்தில் என்ன தவறு, குளறுபடி உள்ளது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து என்னிடம் யாரும் ஆலோசிக்கவில்லை. நான் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் யாரும் சொல்லவில்லை. பாமக, தேமுதிக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையிலான குழு இருக்கிறது. அக்குழுவினர் விரைவில் கூட்டணி குறித்து தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.