சென்னை : விபத்து குறித்து முறையாக விசாரணை நடத்தப்படாததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணையிடப்பட்டுள்ளது. 2019-ல் திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேவி என்பவர் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அரசு பேருந்தை முந்த முயற்சித்தபோது கார் மோதி தேவியின் இடது கை மீது அரசு பேருந்து ஏறி இறங்கியுள்ளது.