மாநாட்டில் 5,068 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 63,573.11 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கக்கூடிய அளவிற்கு இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்மூலமாக 2,50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த 5 மாதங்களில் 1,677 நிறுவனங்கள் 13,003.16 கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தியை துவங்கி இருக்கிறது.
இதன்மூலமாக 46,000 பேருக்கு இப்போதுவரை வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மாவட்ட அளவில் ஒரு குழு அமைத்திருக்கிறோம். ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்ற நிறுவனங்களையெல்லாம் அழைத்துப்பேசி, குறுகிய காலத்தில் அந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அரசு செய்யும்,’’ என்றார்.