இப்பகுதியில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்களிலும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களும், வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்களும் அதிக அளவில் உள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் உள்ளே இயங்கும் கழிப்பறை வெளியில் இருந்து வருபவர்களுக்கு பெரும்பாலும் தெரிய வாய்ப்பு இல்லை.
மேலும் பேருந்து நிலையத்திற்கும் கழிப்பறைக்கும் தூரம் அதிகமாக உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் பேருந்துகளுக்கு காத்திருக்கும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் இயங்கி வந்த பொதுக்கழிப்பறையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.