கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

புழல்: மாதவரம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் செங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜிவ்காந்தி தலைமை தாங்கினார். புழல் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், சோழவரம் ஒன்றிய பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பிரதாப் சந்திரன் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும், நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். இதில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் போஸ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேச பெருமாள், குமார், பஞ்சநாதன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை