டெல்லி: மணிப்பூரில் மறு குடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கண்காணிக்கும். மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.