சென்னை: சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவரை 35,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சி ஆணையர் கூறினார்.