சென்னை: 2024-25-ம் நிதியாண்டில் வணிகவரித்துறையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரித்துறை சோதனையில் ரூ.1,040 கோடியில் போலி உள்ளீட்டு வரி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மூர்த்தி கூறினார்.