இதைதத்தொடர்ந்து மறுநாள் அனுமந்த வாகனம், சேஷவாகனம், சந்திரபிரபை, தங்க பல்லக்கு, யாளி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் அருள்பாலிக்கிறார். 26ம்தேதி முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜவீதி மற்றும் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து செல்வார்கள். மறுநாள் தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆள் மேல் பல்லக்கு, தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், த்வாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் உள்ளிட்ட பல்வேறு கோலங்களில் வீதிஉலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், பட்டாச்சாரியார்கள், விழா குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.