இந்நிலையில் இந்த கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது. முன்னதாக கோயில் ஊழியர்கள், கொடிமரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடியேற்றுவதற்கான கயிறு கட்டும் போது திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தற்காலிகமாக ஒரு கொடிமரம் வைத்து கொடியேற்றினர். பிரமோற்சவ விழா கொடியேற்றத்தின்போது கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.