இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா நேற்றுமுன்தினம் கூறுகையில்,‘‘ யாத்திரையில் பஸ் மீது அமர்ந்து கொண்டு ஒருவர் மக்களை பார்த்து கையசைப்பவர் ராகுல் காந்தியே இல்லை. ராகுல் காந்தி பஸ் மீது அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ராகுல் காந்தியை போல் தோற்றம் கொண்ட டூப் ஒருவர் பஸ் மீது அமர்ந்திருந்தார் என்று செய்திகள் வந்துள்ளன. இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள். அந்த டூப் யார் என்ற விவரங்களை வெளி யிடுவேன் ’’ என்றார்.