டெல்லி: தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம்; மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்தார். ‘எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை’ என்பதால் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்.