அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேதி மாற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெறவிருந்த இக்கல்லூரிக் களப்பயணமானது நிர்வாகக் காரணங்களினால் 06.11.2023 முதல் 09.11.2023 வரை தேதி மாற்றம் செய்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இவ்வாண்டிற்கான கல்லூரிக் களப்பயண நிகழ்வினை மாற்றம் செய்யப்பட்ட தேதிகளில் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்திட அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.