மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு: மணிப்பூர் சம்பவத்திற்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் எதிரொலியாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநகர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்திற்க்கு பழங்குடி பெண்களுக்கு நீதி கோரியும், ஒன்றிய அரசு இன மோதல்களை தடுத்திட வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், மணிப்பூர் பழங்குடி மக்களை பாதுகாத்திட கோரியும், பாலியல் கொடுமைகளை நிறுத்திட கோரியும், இனம் மதம் அரசியலை கடந்து ஒன்றுபடுவோம். ஒன்றிய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராக பதாதைகளுடன், கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!