சென்னை: மதுபோதையில் ரகளை செய்து மாநகர பேருந்தில் .ஓட்டுநரை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி மாநகர பேருந்து எண் 114 சென்றபோது ஓட்டுநர் சுயாட்சி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மதுபோதையில் பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தாளம் போட்டு ஆட்டம் பாட்டம் நடத்தினர்.