கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

ஆவடி: ஆவடியில் 2வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (17). இவர், கோவில்பதாகையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு பயின்று வருகிறார். தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெறுவதையடுத்து தேர்வுத்தாளில் அடித்தல், திருத்தமாக எழுதியதற்கு சஞ்சய்யை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது சக மாணவர்கள் கேலி செய்து சிரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்த சஞ்சய் கல்லூரி வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்ட சக கல்லூரி மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சஞ்சய்யை மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியை அவமானப்படுத்தியதால் மாணவன் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு