இதனால் மணமுடைந்த சஞ்சய் கல்லூரி வளாகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்ட சக கல்லூரி மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சஞ்சய்யை மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியை அவமானப்படுத்தியதால் மாணவன் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.