கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சோழவரம் ஒன்றியம் துரைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(60). அவருடை மனைவி வெங்கட்டம்மாள்(38) ஆகியோர் இரண்டு மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவருடைய மூத்த மகள்(17) இவர் 12ம் வகுப்பு படித்துவிட்டு மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்ற மகள் நேற்றுமுன்தினம் வீடு திரும்பவில்லை. எனவே, அவருடைய தாயார் வெங்கட்டம்மாள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, வெங்கட்டம்மாள் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில், மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.