Thursday, July 4, 2024
Home » கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு: முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு: முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

by Karthik Yash

சென்னை: ‘‘சென்னை கல்லூரிகளில் ராகிங் நடைபெறாதபடி அனைத்துக் கல்லூரிகளிலும் ராகிங் தடுப்பு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்’’ என கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர் ராகிங் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா, அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில்கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரி முதல்வர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும். ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்கவேண்டும்.

ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியினை அமைத்து ராகிங் கொடுமையினை அறவே ஒழிக்க முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வரும், துறைத் தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கடந்த 2019ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, மராட்டிய அரசின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ‘ராகிங்’ குழுக்கள் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு செய்து, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒருவாரத்துக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi