கல்லூரி, பள்ளி மாணவிகள் மாயம்

பொன்னேரி: கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் மாயம், கண்டுபிடித்து தர வேண்டும் என குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பொன்னேரி அடுத்து என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் முருகப் பிரபு இவரது மகள் சௌமியா (22). இவர் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி கலைக்கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி நேற்றுமுன்தினம் சென்றவர், வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது, மாணவி வரவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நண்பர்கள், உறவினர்கள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. முருகப்பிரபு பொன்னேரி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் அடிப்படையில், பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவியை, யாராவது கடத்தி சென்றார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், பொன்னேரி அடுத்த பெரும்பேடு லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பெரும்பேடு அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. எனவே, நண்பர்கள் உறவினர்கள் என பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மணவியின் தந்தை சேகர் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த இரு மாணவிகளையும் தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா