காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னேரி கரை, செவிலிமேடு உள்ளிட்ட பல இடங்களில் பேரணியாக செல்ல தயாராகி வந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்சங் ஊழியர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 60 பேர் ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.