புயல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் 9 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார்.