இதனை அடுத்து, அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்னும் என்னென்ன வசதிகள் தேவை என்றும் கேட்டறிந்தார். அப்போது, காய்ச்சலுக்கு என்று தனி வார்டு, புதிய புற நோயாளிகள் பிரிவு ஆகியவை தேவை என்று கூறினார். இதனை உடனடியாக செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உறுதி அளித்தார்.
அப்போது அவருடன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.