சேலம்: மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி பரிசல் துறையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நண்பகல் 12 மணி நிலவரப்படி 82.51 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பதை அடுத்து சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி இன்று அணை நீர்த்தேக்கப் பகுதிகளில் ஆய்வு செய்தார். நீர்வரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, மீனவர் நலன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.