இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 5ம் தேதி டிஆர்ஓ ராம பிரதீபன், ஏடிஎஸ்பி பழனி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இறந்த இளங்கோவின் உடல் சொந்த கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.