பாமக விழாவில் சரிந்து விழுந்த மேடை: உயிர் தப்பிய அன்புமணி

வாழப்பாடி: பாமக விழாவில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அன்புமணி கீழே குதித்து உயிர் தப்பினார். சேலம் மாவட்டம், வாழப்பாடியில் நேற்று மாலை, பாமக கொடி ஏற்று விழா நடந்தது. இதில், பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று கொடியேற்றி வைத்தார். பின்னர், அருகே அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில், தொண்டர்களிடையே பேசுவதற்காக ஏறினார். அப்போது நிர்வாகிகள் அவருக்கு ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்தனர். தொடர்ந்து, நிர்வாகிகள் வரவேற்பு அளித்து கொண்டிருந்த போது, ஆட்கள் அதிகமானோர் இருந்ததால், திடீரென மேடை சரிய தொடங்கியது.

இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட அன்புமணி, வேகமாக மேடையில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால், அவருடன் மேடையில் இருந்த நிர்வாகிகள் தள்ளாடி, ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு கீழே சாய்ந்து விழுந்தனர். இதை கண்டு சம்பவ இடத்தில் இருந்த வாழப்பாடி போலீசார், அன்புமணியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு