கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோ குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ள மிரட்டலால் பெரும் பரபரப்பு

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோ குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ள மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ள ஒரு மின்னஞ்சல் கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு மிரட்டலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். போலியான கணக்கில் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இ-மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்