இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு மிரட்டலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். போலியான கணக்கில் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இ-மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.