கோவை; கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பானி பூரி ரசம், 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.