அத்துடன் மதுக்கரை சாலையில் உள்ள மின்கம்பமும் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் மதுக்கரை தரைப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இதில் மழை நீர் செல்வதற்கு போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே போதிய வெள்ள பாதிப்புக்குகாரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரைப்பாலம் மற்றும் சாலை அடித்து செல்லப்பட்ட பகுதிகளில் நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் தரைப்பாலத்திற்கு முன்னதாக தடுப்பணை கட்டவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.