கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் கணவர் ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். கடந்த 23-ல் வழக்கு விசாரணைக்கு வந்த கவிதா மீது நீதிமன்ற வளாகத்தில் அவரது கணவர் ஆசிட் வீசினார். 80 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.