சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள, முகமது அசாருதீன், தாஹா நசீர் ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் கடந்த வாரம் மனு செய்திருந்தனர். நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், இருவரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் டிச.8ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.