கோவை: கோவையில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.86 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகானந்தத்திடம் மோசடி செய்த அரவிந்த்குமார், அன்பழகன் ஆகியோர் கைதாகினர். பல கோடி ரூபாய் கடன் வாங்க பரிசீலனை கட்டணமாக ரூ.1.86 கோடி வாங்கிவிட்டு முருகானந்தம் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மதுரையில் பதுங்கியிருந்த அரவிந்த் குமார், அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.