கோவை: மதுக்கரை அருகே தோட்டத்தில் விளையாடும் போது மாயமான 7 வயது சிறுவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் குடும்பத்தினர் அங்குள்ள தோட்டத்தில் தங்கி கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.