கோவை: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் அக்கீம் (46). இவர், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மூளையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், கோவை உக்கடம் ஜி.எம் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார்.