கோவையில் திருட்டு: பைக்கில் வந்து, பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர்கள்

கோவை: கோவையில் விலையுயர்ந்த பைக்கில் வந்து தெருவில் நின்று கொண்டிருந்த மற்றொரு விலையுயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

பசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத்தை திருட, வாகன கொள்ளையர்கள் நோட்டமிட்டபோது அங்காளம்மன் கோயில் வீதியில் ஐடி ஊழியருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் பைக் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதனை கண்ட கொள்ளையர்கள் ஸ்குரூ டிரைவர் உள்ளிட்டவற்றைக்கொண்டு லாவகமாக வாகனத்தை ஓட்டி சென்றனர். கொள்ளையர்கள் டியூக் பைக்கை கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனமும் விலை உயர்ந்த ஆர்15 வாகனம் என்பது போலிசார் புலன் விசாரணையில் தெரியவந்தது.

பைக் கொள்ளையன் வாகனத்தை திருடும்போது சிசிடிவுக்கு “டாட்டா” காட்டியபடி திருட்டில் ஈடுபட்டுள்ளார். டாட்டா காட்டிவிட்டு சிட்டா பறந்த பைக் கொள்ளையனை பசார் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுக சிறுக சேமித்த பணத்தால் வண்டி வாங்கியதாக ஐடி ஊழியரான சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை