கோவை: கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அவினாசி மேம்பால சுரங்கப்பாதை மழைநீரில் மூழ்கியது. கிக்கானிக் பள்ளி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளை கொண்டு சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.