கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை கடந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வன்முறை நடத்தினர். பா.ஜ.க.வினர் வன்முறை தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில் அண்ணாமலை மீது விதிமீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு