கோவை: கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை கடந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். நேரம் கடந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வன்முறை நடத்தினர். பா.ஜ.க.வினர் வன்முறை தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில் அண்ணாமலை மீது விதிமீறல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.