கோவை: கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் (29) தற்கொலை செய்து கொண்டார். காதலிக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி விட்டு ஊசி மூலம் அதிகளவு மயக்க மருந்து செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.