கோவை: கோவை பீளமேடு தனியார் மருத்துவமனையில் இரும்பு கம்பிகளை திருட முயன்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மணியை மருத்துவமனை ஊழியர்கள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.