திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளை போற்றும் வகையில் 247 தமிழ் எழுத்துக்களை உபயோகித்து செய்யப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த பொறியாளர் தெரிவித்துள்ளார். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி செலவில் குறிச்சிக்குளம் உள்பட 7 பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரியின் முகப்பு மேம்படுத்தப்பட்டு தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளை பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள் கொண்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளன.