தற்போது அணையின் நீர்மட்டம் 11.32 அடியில் இருந்து 14.53 அடியாக அதிகரித்துள்ளது. இது நேற்று முன்தினத்தை காட்டிலும் 3 அடி உயர்ந்துள்ளது. எஞ்சிய காலங்களிலும் இதுபோன்ற தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரையறுக்கப்பட்ட கொள்ளளவில் இருந்து நீர்மட்ட உயரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக இருக்கும். சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்ந்திருப்பது கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.