கோவை: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் மறியல் ஈடுபட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.