இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.நேரு விளையாட்டு அரங்கில் துவங்கிய மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் பலர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர். வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் , சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.