கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய 3 பேர் கைது!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக் காவலரை தாக்கிய புகாரில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. இருசக்கர வாகனத்தில் ஒரே நேரத்தில் 3 பேர் வந்தபோது தடுத்து நிறுத்தி போக்குவரத்து காவலர் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார். வாகனத்தை தடுத்த போக்குவரத்து காவலர் ஆனந்தை தரக்குறைவாக பேசி 3 பேரும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. காவலர் ஆனந்த் அளித்த புகாரில் சாகுல் ஹமீது, ஹபீப் அலி, அலாவுதீன் முகமது உசேன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!