கோவை: கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ராஜா என்பவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். கே.எம்.சி.எச். மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த தொழிலாளி ராஜா, கே.எம்.சி.எச். மருத்துவமனைக்குள் புகுந்து கம்பிகளை திருட முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் கே.எம்.சி.எச். மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்க தொழிலாளி ராஜாவின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.